என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Thursday, August 15, 2013

தலைவா - எனது பார்வையில்....


இன்னும் தமிழ் நாட்டில் தலைவா படம் திரையிட படவில்லை. இலங்கையிலும் திரையிட படுமா இல்லையா என சந்தேகம் இருந்தும் இறுதி நேர தீர்மானத்தில் கடந்த எட்டாம் திகதி வெளியிடப்பட்டது. VIP ஷோ க்கு டிக்கெட் இருந்தும் கடைசி நேர அறிவித்தலால் போக முடியவில்லை. ஆனால் அடுத்த நாளே போய் அடிபிடி பட்டு ரெண்டாவது வரிசையில் இருந்து படம் பார்த்து அடி வாங்கியாகி விட்டது.

Tuesday, July 23, 2013

பியகம நீர் வழங்கல் திட்டம்

  • 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி மக்களின் பாவனைக்காக கையளிக்கப் பட்டுள்ளது.
  • தேசிய நீர் வழங்கல் தொகுதிக்கு நாளொன்றுக்கு 180 மில்லியன் கன மீட்டர் நீரை வழங்குகின்றது.
  • 1 மில்லியன்னுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் பயன் பெறுகின்றனர்.


Thursday, July 18, 2013

கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம்

திட்ட விபரம்:

உள்ளடங்கும் சனத்தொகை : 40,000
திட்டத்திற்கான செலவு : 1,655 மில்லியன் 

Tuesday, July 16, 2013

SEETHAMMA VAKITLO SIRIMALLE CHETTU- எனது பார்வையில்.....



நான் தெலுங்கு படங்கள் பார்க்கத் தொடங்கி ஒரு 4/5 வருஷம் தான் இருக்கும். அல்லு அர்ஜுன் படங்களுக்கு நான் அடிமை. மகேஷ் பாபு படங்களுயும் ரசித்து பார்ப்பேன். தெலுங்கு படம் என்றாலே ஆக்ஷன் மசாலா தானே. 3 மணித்தியாலங்கள் ஓடினாலும் விறுவிறு என்று நகரும் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்று. தமிழ் ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்கள் போலவே என்பதற்கு சிங்கம் 2 வின் வெற்றி ஒரு உதாரணம். 

Friday, June 14, 2013

அம்மாவுக்கு சேவை நலன் பாராட்டு விழா

கடந்த 10 ஆந் திகதி (10.06.2013) அன்று எங்கள் வீட்டில் (கல்முனையில்) காலை வேளை எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். அன்று தான் அம்மாவுக்கு கல்முனை ராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதுக்காக பாடசாலையால் நடாத்தப்படும் "சேவை நலன் பாராட்டு விழா".... நானும் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே சொல்லியாகி விட்டதால் அன்று லீவு போட்டு வந்து விட்டேன். குடும்பத்தில் எல்லோரையும் அழைத்திருந்தார்கள். வீட்டிற்கு கார் அனுப்பி அவர்களே வந்து அம்மாவை அழைத்துச் சென்றார்கள்...