கடந்த 10 ஆந் திகதி (10.06.2013) அன்று எங்கள் வீட்டில் (கல்முனையில்) காலை வேளை எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். அன்று தான் அம்மாவுக்கு கல்முனை ராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதுக்காக பாடசாலையால் நடாத்தப்படும் "சேவை நலன் பாராட்டு விழா".... நானும் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே சொல்லியாகி விட்டதால் அன்று லீவு போட்டு வந்து விட்டேன். குடும்பத்தில் எல்லோரையும் அழைத்திருந்தார்கள். வீட்டிற்கு கார் அனுப்பி அவர்களே வந்து அம்மாவை அழைத்துச் சென்றார்கள்...